சிவனடியார்களே ! மலரவிருக்கும் மங்களகரமான சுபகிருது எனும் பெயர் கொண்ட புதுவருட சிறப்புப் பூசை வழிபாடுகள் திருவள்ளுவர் ஆகண்டு 2053இ சித்திரைத் திங்கள் 01 நாள் (14.04.2022 வியாழக்கிழமை) இலிங்கநாதப் பரமேஸ்வரப் பெருமான் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது . நாமும் எம் தாயக மக்களும் தற்போதுள்ள அசாதாரண சூழல் நீங்கி இன்புற்று வாழ எம்பெருமானை வேண்டி அருள்பெற்றுய்யும் வேண்டிக் கொள்கின்றோம் .
விஷு புண்ணிய காலம் 14.04-2022 வியாழன் அதிகாலை 0.20 முதல் 8.20…
07
பிப்ரவரி

மகா சிவராத்திரி நோன்பு 28.02.2022
தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்.
(அப்பர் சுவாமிகள்)
சிவனடியார்களே!
சைவசித்தாந்தம் கூறுகின்ற மும்மலங்களில் மூலமாகத் திகழும் ஆணவமலம் தேவாதி தேவர்களையும் பீடித்திருந்தது உண்மையே. இதனை மையமாகக் கொண்டு நான் (பிரம்மா) பெரிது, இல்லை நான் தான் (விஷ்ணு) பெரிது என அகங்காரம் கொண்டு பிரம்மா அன்னப் பறவையாகவும்ää விஷ்ணு பன்றியாகவும் ஒளிப்பிழம்பின் (சிவபெருமானின்) அடி முடி தேடிச் சென்றபோது இறைவன் சோதி வடிவமாகக் காட்சி கொடுத்த…
25
டிசம்பர்

சிவனடியார்களே! நிகழும் மங்களகரமான பிலவ வருடம் திருவள்ளுவர் ஆண்டு 2053 தைத்திங்கள் (14.01.2022) வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் திருநாளாகும். தெட்சணாயணம் முடிவடைந்து உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகின்ற இத்திருநாளிலே தைப்பொங்கல் விசேட வழிபாடுகள் எமது ஆலயத்தில் சிறப்பாக நடைபெற இறையருள் கைகூடியுள்ளது. அடியார்கள் திருநாளன்று வருகைதந்து எம்பெருமானைத் தரிசித்து ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் நிகழ்விலும் கலந்து சிறப்பித்து எம்பெருமான் அருள் பெறுவதோடு தாயக உறவுகளின் விடிவிற்கும் பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம். தைப்பொங்கல் திருநாளன்று.. 1. காலை…
07
டிசம்பர்

சிவனடியார்களே!
நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2052, பிலவ வருடம் கார்த்திகைத் தி;ங்கள் 26ம் நாள் (11.12.2021) சனிக்கிழமை முதல் மார்கழித் திங்கள் 05ம் நாள் (20.12.2021) திங்கட்கிழமைவரை திருவெம்பாவைப் பூசை சிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ளது. இத்திருவெம்பாவை விரத நாட்களில் வருகைதந்து எம்பெருமானுக்கு நடைபெறும் பூசைகளில் பங்குகொண்டும் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடியும் எம்பெருமானின் அருள்பெற்று மகிழ்வோடு வாழ்வதோடு தாயகத்தில் அல்லலுறும் எமது உறவுகளும் மகிழ்வுற்றிருக்க சிவனருள் வேண்டி சிவன்தாள் பணிந்து பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோம்.
திருவெம்பாவை விரத நாட்களில்
மாலை 17:30…
20
அக்டோபர்

சிவனடியார்களே!
நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2052 பிலவவருடம்; புரட்டாதித்திங்கள் 29ம் நாள் (15.10.2021) வெள்ளிக்கிழமை கேதார கௌரி விரதம் ஆரம்பித்து ஐப்பசித்திங்கள் 18ம் நாள் (04.11.2021)வியாழக்கிழமை வரை வெகு சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. அடியார்கள் இவ்விரத தினங்களில் வருகை தந்து அம்பாளுக்கு நடைபெறும் அபிசேகம், பூசை என்பனவற்றில் கலந்து கொண்டு பேரருள் பெற்றுய்வதோடு எமது தாயக உறவுகளும் இன்புற்றிருக்க பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்.
கேதார கௌரி விரத தினங்களில்
மாலை - 17.00 மணிக்கு - அபிசேகம்
மாலை…
03
அக்டோபர்

சிவனடியார்;களே!
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் புரட்டாதித்திங்கள் 21ம் நாள் (07.10.2021) வியாழக்கிழமை நவராத்திரி விரதம் ஆரம்பித்து புரட்டாதித்திங்கள் 29ம் நாள் (15.10.2021) வெள்ளிக்கிழமை விஜயதசமி வரை நவராத்திரி பூசை வெகு சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. அடியார்கள் இவ்விரத தினங்களில் வருகை தந்து துர்க்கை, இலச்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களுக்கு நடைபெறும் அபிஷேகம், பூசை என்பனவற்றில் கலந்து கொண்டு, பேரருள் பெற்றுய்வதோடு, எமது தாயக உறவுகள் இன்புற்று வாழவும்; பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
நவராத்திரி விரதநாட்களில்
மாலை…
11
செப்டம்பர்

எம்பெருமான் அடியார்களே! நவக்கிரகங்களுள் சாயாக்கிரகம் என்று பெயர் பெற்று அவர் சஞ்சாரம் செய்யும் இராசிக்கமைய அடியார்களுக்கு சுப, அசுப பலன்களை வழங்கி அனுக்கிரகித்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானுக்கு பிரதி சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிபடுதல் சாலச்சிறந்தது. ஆயினும் புரட்டாதி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகள் அவருக்கு உகந்தவை. இத்தினங்களில் அடியார்கள் விரதமிருந்து, சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணை தீபமேற்றி, கருநீல மலர்களால் அர்ச்சனை செய்து, எள்ளுச் சாதம் நைவேதனம் செய்து, சிவவழிபாடு செய்து வர சனீஸ்வர தோஷம் நீங்கப்பெற்று…
31
ஆகஸ்ட்

'திருவாக்கும் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலாற் கூப்புவர்தம் கை"
சிவனடியார்களே!
விக்கினங்கள் அனைத்தையும் தீர்த்து அடியார்களுக்கு அருள்பாலிக்கும் எல்லாம் வல்ல விநாயகப்பெருமானுக்கு மிகவும் உகந்ததுவும்ää அனைத்து நலன்களையும் தரக்கூடியதுமாகிய விநாயக சதுர்த்தி விரதம் நிகழும் மங்களகரமான பிலவ வருடம், திருவள்ளுவர் ஆண்டு 2052 ஆவணித் திங்கள் 25ம் நாள் (10.09.2021) வெள்ளிக்;கிழமை வருகின்றது. அன்றைய தினம் எமதாலயத்தில் விநாயகப் பெருமானுக்கு விசேட அபிசேகம், பூசை, திருவிழா என்பனவெல்லாம் வெகு சிறப்பாக நடைபெற…
19
ஆகஸ்ட்

"வீட்டுதிட்டம் ஆரம்பிக்கின்றது அன்பேசிவம் "
interleo garage உரிமையாளரும் தொழிலதிபருமான தியாகராஜா-ராஜமோகன்(கண்ணன்)அவர்களின் நிதி உதவியில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசசெயலக பிரிவில் காட்டு கிராமமான கட்டுமுறிவில் 5 குடும்பங்களிற்கு முதல் கட்டமாக வீடுகள் அமைத்து கொடுக்கபட இருக்கின்றது. அதன் ஆரம்ப நிகழ்வு 20.08.2021 வெள்ளிக்கிழமை நடைபெறும்.
16
ஆகஸ்ட்

வரலட்சுமி விரதம் 20.08.2021
சிவனடியார்களே! அழகிய கிளாட்புறூக் பதியில் கோவில் கொண்டு வேண்டும் அடியார்களின் துயர் நீக்கி பேரருள் பாலித்துக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல பார்வதி அம்பாள் உடனுறை இலிங்கநாதபரமேச்சுரப் பெருமான் ஆலயத்தில் அனைத்து நலன்களையும் அருளி அடியார்கள் வேண்டும் வரங்களையெல்லாம் தரக்கூடியதுமான வரலட்சுமி விரதம் நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2052, பிலவ வருடம் ஆவணித்திங்கள் 4ம் நாள் (20.08.2021) வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறத் திருவருள் கைக்கூடியுள்ளது. இவ்விரத தினத்தன்று அடியார்கள்…