சிவனடியார்களே!
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் திருவள்ளுவர் ஆண்டு 2053 தைத்திங்கள் (14.01.2022) வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் திருநாளாகும். தெட்சணாயணம் முடிவடைந்து உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகின்ற இத்திருநாளிலே தைப்பொங்கல் விசேட வழிபாடுகள் எமது ஆலயத்தில் சிறப்பாக நடைபெற இறையருள் கைகூடியுள்ளது.
அடியார்கள் திருநாளன்று வருகைதந்து எம்பெருமானைத் தரிசித்து ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் நிகழ்விலும் கலந்து சிறப்பித்து எம்பெருமான் அருள் பெறுவதோடு தாயக உறவுகளின் விடிவிற்கும் பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்.
தைப்பொங்கல் திருநாளன்று..
1. காலை 09.00 மணிக்கு காலைப்பூசை
2. காலை 10.30 மணிக்கு பொங்கல் நிகழ்வு
3. காலை 11.30 மணிக்கு மூலவர் அபிசேகம்
4. மதியம் 12.00 மணிக்கு தைப்பொங்கல் விசேட பூசை
5. இரவு 6.00 மணிக்கு இரவுப்பூசை
6. வருடாந்த பொதுக்கூட்டம்
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்
அனைவரும் வருக! சிவன் அருள் பெறுக!
அருள்மிகு சிவன் கோவில்
சைவத் தமிழ்ச் சங்கம்