Skip to content Skip to footer

அன்பு பயமறியாதது.

ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு சிங்கம் அவள் குழந்தையின் மீது பாய்கிறது. அவள் அப்போது என்ன செய்வாள்? சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப்பணித்தாவது அவள் குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா? இவ்வுதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உண்மையான அன்பின் இலக்கணத்தை விளக்குகிறார்: அன்பு பயம் அறியாதது. பயத்திற்குக்…

இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்.

இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான் ″ என்கிறது. “ஒன்று அவன்தானே” என்கிறது திருமந்திரம். இதனை மாணிக்கவாசகர் ″முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே″ – திருவெம்பாவை என்றார். இவை சைவ மரபின் இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டை வலியுறுத்துவன. இறைவன் பசுபதி எனப் போற்றப்படுகின்றான். பசு என்றால் ஆன்மா. பதி…

கர்மா

கர்மா என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? ஒரு செயல் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறதா அல்லது தீமையை தருகிறதா என்பதை பொறுத்து அதன் பலனை நாம் அனுபவிப்போம். நமது அனைத்து செயல்களும் சுற்றுப்புற சூழல், தாவரம், விலங்குகள், மற்ற மனிதர்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கிறது. அந்த பாதிப்பு நன்மையாக இருந்தால் நமக்கு புண்ணியமும் தீமையாக இருந்தால் நமக்கு பாவமும் ஏற்படும். பாவமும் புண்ணியமும் ஒன்றை ஒன்று நீக்கிவிடாது. நாலு பேருக்கு நல்லது செய்வதற்காக அதர்மமான செயலில் ஈடுபட்டால்…

மன அழுத்தம்.

மன அழுத்தம், மனஅழுத்தம் இன்று உலகவில் பெருமளவு மக்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும். வாழ்வியல் மாற்றங்கள் பொருளாதார சூழ்நிலைகள் குடும்பம் உடல்நலம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் போன்றவைகள் மனஅழுத்தம் ஏற்பட கூடிய முக்கிய காரணங்களாகும். இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் மனஅழுத்தம் ஏற்படலாம், ஆனால் அதை அவர்கள் எவ்வாறு கடந்து செல்கிறார்கள் என்பது தான் முக்கியம். மனஅழுத்ததை நீங்கள் நினைத்தால் எளிதில் அதில் இருந்து விடு பட…

மனம் என்றால் என்ன?

ஒருவரின் மனம், நொடிக்கு நொடி மாறும் என்பதை அனுபவப்பூர்வமாக உணரக்கூடியதுதான். “மனம்” என்பதன் கருத்தாக்கம் பிடிபடாததாக இருக்கிறது, பல்வேறு மொழிகள் இதனை பலவிதங்களில் கருத்தாக்கம் செய்கின்றன. பௌத்த முறையில், சமஸ்கிருத மொழியில் மனம் என்பற்கு சிட்டா என்று பொருள், இதற்கு பரந்துபட்ட அர்த்தம் இருக்கிறது. புலனுணர்வு, உணர்வுகள், சொல்லார்ந்த மற்றும் புலனாகாத சிந்தனை, உணர்வுகள், இன்ப துன்ப உணர்வுகள், கவனம், செறிவு, நுண்ணறிவு இன்னும் பலவற்றை இவை உள்ளடக்கியுள்ளது. பெளத்தம் கூறும் மனம் என்பது, எல்லாவிதமான மனநிலைகளையும்…

தியானம் என்றால் என்ன?

மனதின் நன்மை பயக்கும் நிலைகளை மேம்படுத்தும் ஒரு வழிமுறையே தியானமாகும். மனதின் சில நிலைகளை உருவாக்க அதுவே பழக்கமாகும் வரை திரும்பத் திரும்ப செய்கிறோம். உடல் அளவில் தியானம் என்பது புதிய நரம்பியல் பாதைகளை கட்டமைப்பதாகக் காட்டுகிறது. தியானத்தின் பலன்கள் தியானத்தின் மூலம் நாம் மேம்படுத்தக் கூடிய பல்வேறு விதமான பலன் தரும் மனநிலைகள் இருக்கின்றன: மன அழுத்தம் குறைவாக, அதிக நிதானத்தோடு இருத்தல் குறுகிய மனமின்றி, குறிக்கோளோடு இருத்தல் நிலையான கவலைகள் இல்லாது, அமைதியாக இருத்தல் நம்முடைய மற்றும் பிறரின் வாழ்க்கைப் பற்றி நல்ல…

அருள்மிகு சிவன் கோவில்.
Industriestrasse 34
CH-8152 Glattbrugg
Switzerland.

ஆலயம் திறத்திருக்கும் நேரம்

காலை 09:00 மணி முதல் 14:00 மணி வரை.

மாலை 17:00 மணி முதல் 21:00 மணி வரை.

பூசை நேரங்கள்

காலை 09:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 19:00 மணிக்கு .

சிறப்பு நாட்களில் நேர மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

அருள்மிகு சிவன் கோவில் © 2023. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
மொழியை மாற்ற »