|
|
தமிழ்த் தேசத்தின்வலி சுமந்த நாள்
14.05.2010
தமிழீழத் தாயகத்தில் சென்ற ஆண்டு(18.05.2009) வைகாசி மாதம் 18 ம்
திகதி எமது உறவுகளின் உயிர்களை காவு கொண்ட, அதியுச்ச மனிதப்படுகொலையில் உயிர் நீத்த
அனைத்து பொது மக்களுக்கும் போராளிகளுக்கும் ஆத்ம சாந்தி வேண்டி சிவனாலயத்தில்
14.05.2010 வெள்ளிக்கிழமை மாலை 19.30 மணிக்கு வழமையான பூசையினைத் தொடர்ந்து விசேட
ஆத்ம சாந்திப்பூசை நடைபெற்றது.
இவ்நிகழ்வு சுமார் 8.30 மணிக்கு ஆரம்பமானது. ஆலயம் நிறைந்த அடியார்கள் கூட்டத்தால்
மிகவும் உணர்வுபூர்வமாக உயிர் நீத்த அனைத்து பொது மக்களுக்கும் போராளிகளுக்கும்
ஆத்ம சாந்தி வேண்டி விசேட ஆத்ம சாந்திப்பூசை நடைபெற்றது. மனதில் கனத்த கவலையோடு
இக்கொடுமை இனிமேல் என்றுமே நடக்கக் கூடாது என அடியார்கள் கூட்டம் இறைவனிடம்
முறையிட்டது போன்று மிக அமைதியாகவும், உணர்பூர்வமாகவும் நடைபெற்றது.
ஆலயகுருவின் ஆத்மசாந்தி பூசையினைத் தொடர்ந்து, விசேடமாக அமைக்கப்பட்ட வணக்கப்
பூங்காவில் இவ் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.ஈகைச்சுடரினை சைவத் தமிழ்ச் சங்கத்தின்
சார்பாக திரு. சுவேந்திரராசா அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாடு கடந்த
அரசின் சுவிஸ் பிரதிநிதியும், தமிழிழ விடுதலைப் புலிகளின் சுரீச் மானிலப்
பொறுப்பாளருமான திரு. ஜெயம் அவர்கள் மலரஞ்சலி செலுத்தி வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து சைவத் தமிழ்ச் சங்கத்தினால் சென்றாண்டு வெளியிடப்பட்ட தமிழிழ விடுதலைக்கு
உழைத்து வித்தானவருக்கான வணக்கப்பாடல் ஆலயத்தை அதிர வைத்தது. அனைவரும் அமைதியாக
எழுந்து நின்று உயிர் நீர்த்த உறவுகளோடு ஒன்றி உறவாடினர். பாரீஸ் இந்திரனின்
ஒன்றல்ல நூறல்ல ஓராயிரம் என்ற பாடல் ஒலிக்க, அடியார்கள் ஆலயத்தினை சுற்றி வந்து
வணக்கப் பூங்காவில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து திரு.ஜெயசீலனின் கவிதாஞ்சலியோடு நிகழ்வு நிறைவு பெற்றது. இவ்நிகழ்வினை
திரு. சிறீஸ்கந்தவேள் தொகுத்து வழங்கினார்.
|
|